செய்திகள்

வெரைட்டிஹால் ரோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2018-10-16 11:20 GMT   |   Update On 2018-10-16 11:20 GMT
வெரைட்டிஹால் ரோடு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை வின்சென்ட் ரோடு ஈஸ்வரன் கோவில் சந்திப்பில் வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மது விக்ரம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த கருப்புக்கடையை சேர்ந்த நிஷார் (வயது 21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News