செய்திகள்
பழைய வண்ணாரப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
பழைய வண்ணாரப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (40). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.
நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு இவர் அலுவலக பணிக்கு சென்று விட்டார். பணி முடிந்து மாலை 4 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா உள்ளே சென்று பார்த்தார்.
பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் உள்ள 2 கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.