செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-10-16 04:34 GMT   |   Update On 2018-10-16 04:34 GMT
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal
ஒகேனக்கல்:

கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 6,200 கன அடியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். #Hogenakkal

Tags:    

Similar News