செய்திகள்

பள்ளிக்கரணை அருகே வீட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-10-15 09:09 GMT   |   Update On 2018-10-15 09:09 GMT
பள்ளிக்கரணை அருகே வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணையை அடுத்த ஜல்லடையான் பேட்டையை சேர்ந்தவர் அரவிந்தன். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரம் சென்றார்.

இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 13 பவுன் தங்கநகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News