செய்திகள்

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய வேலூர் சிறுவன் கைது

Published On 2018-10-13 11:06 GMT   |   Update On 2018-10-13 11:06 GMT
திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:

திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் குர்ராலபாடி என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் சத்தம் கேட்டதால் அந்த பகுதிக்கு போலீசார் சென்று செம்மரம் வெட்டி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.

இதில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த பெரிவள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெகன் (வயது 25). வேலூர் மாவட்டம் மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது.

மேலும் ஜெகன் போலீசாரிடம் கூறுகையில் ஒடுக்கத்தூரை சேர்ந்த ராஜாகாந்தி என்பவர் 10 பேரை அழைத்து வந்து திருப்பதி பஸ்சில் ஏற்றி அனுப்பியதாகவும் கடந்த ஒரு வாரமாக செம்மரங்களை வெட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News