செய்திகள்

வேலூர் ஜெயில் பெண் கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-10-13 10:34 GMT   |   Update On 2018-10-13 10:34 GMT
வேலூர் ஜெயிலில் உள்ள பெண் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்:

தருமபுரியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62). கடந்த 2007-ம் ஆண்டு ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இந்த பெண் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சின்னம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News