செய்திகள்

காரில் செம்மறி ஆடுகள் கடத்தல்- போலீஸ் விசாரணை

Published On 2018-10-10 11:40 GMT   |   Update On 2018-10-10 11:40 GMT
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் காரில் செம்மறி ஆடுகளை கடத்தி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது40). இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு, மாலை வீட்டின் எதிரே உள்ள பட்டியில் அடைத்தார்.

அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வந்த மர்மநபர்கள் ஆட்டுப்பட்டியில் இருந்த செம்மறி ஆடுகளை திருடி சென்றனர். அதைப்பார்த்து பழனிவேல் கூச்சலிட்டதும் மர்மநபர்கள் தப்பியோடினர். பின்னர் ஆட்டுப்பட்டியை சென்று பார்க்கையில் 5 செம்மறி ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News