செய்திகள்

சொக்கானூரணி அருகே காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு- வாலிபர் கைது

Published On 2018-10-09 11:56 GMT   |   Update On 2018-10-09 11:56 GMT
காதலிக்குமாறு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் வெளியே செல்லும் போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுமன் (வயது 19), ராஜாகனி மகன் ரங்கேஷ் ஆகியோர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இளம்பெண் பல முறை எச்சரித்தும் அவர்கள் திருந்தவில்லை. அவர்களின் தொந்தரவு வரம்புமீறி சென்றது. மேலும் அந்த பெண்ணின் புகைபடத்தை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த சுமனை கைது செய்தனர். ரங்கேசை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News