செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேரலாம் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

Published On 2018-10-07 15:49 GMT   |   Update On 2018-10-07 15:49 GMT
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், 2018-19-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ரபி பருவத்தில் நெற்பயிர் (சம்பா) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 520 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்.கடன்பெறாத விவசாயிகள் சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 30-ந்தேதி ஆகும். நெல் பயிருக்கான காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.24ஆயிரம் ஆகும்.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.360 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. எனவே, விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெமாறும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது
Tags:    

Similar News