செய்திகள்
முதலமைச்சர் பற்றி அவதூறு- காஞ்சிபுரம் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது வழக்கு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #EdappadiPalanisamy #ADMK
கோவை:
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் கடந்த 3-ந் தேதி கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.யுமான எழிலரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேசினர்.
இது குறித்து காட்டூர் போலீசார் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,எழிரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy #ADMK
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் கடந்த 3-ந் தேதி கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.யுமான எழிலரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேசினர்.
இது குறித்து காட்டூர் போலீசார் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,எழிரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy #ADMK