செய்திகள்
கடலில் மாயமான 6 மீனவர்கள் கரை திரும்பினர்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாமல் மாயமான 6 மீனவர்கள் நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். #Fishermen
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen