செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு

Published On 2018-10-04 17:11 IST   |   Update On 2018-10-04 17:11:00 IST
சென்னையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் இருவரது வீடுகளில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #GutkhaScam #CBI
சென்னை:

தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவராவ் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய வருவாய்த்துறை அதிகாரியான செந்தில் வளவன் மற்றும் கலால்துறை அதிகாரி ஸ்ரீதர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் நடத்தியதாக கூறப்படுகிறது. #GutkhaScam #CBI
Tags:    

Similar News