செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. தமிழகத்தின் பிறபகுதிகளில் மழை பெய்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான சாரல் மழையினால் பூமி குளிர்ந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு ஏற்படும்.
திண்டுக்கல் 4.6, கொடைக்கானல் 4.3, பழனி 2.0, சத்திரப்பட்டி 7, நத்தம் 7.5, நிலக்கோட்டை 16, வேடசந்தூர் 0.3, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 0.3, காமாட்சிபுரம் 2.3, கொடைக்கானல் போட்கிளப் 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 49.3 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.