செய்திகள்

ராஜபாளையம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2018-10-03 12:32 GMT   |   Update On 2018-10-03 12:32 GMT
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் முத்தாநதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் யமுனா (வயது 17). பிளஸ்-2 மாணவி.

கடந்த சில நாட்களாக யமுனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார்.

ஆனால் அக்கம், பக்கத்தினர் யமுனாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு யமுனா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கீழராஜ குலராமன் போலீசில், அவரது தாய் ரதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நெல்லை மாவட்டம், ராயகிரியைச் சேர்ந்த மாடத்தி (36) என்பவருக்கும், ராஜபாளையம் முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த மாரியப்பன், ரேகா என்பவரை மறுமணம் செய்தார்.

இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த மாடத்தி மனநலம் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த அவர், தாத்தா வீட்டில் உள்ள குழந்தைகளை பார்ப்பதற்காக முத்துச்சாமிபுரம் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அங்குள்ள பாரதி நகர் கிணற்றில் மாடத்தி பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாடத்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து அவரது தாயார் கந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News