செய்திகள்

மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை

Published On 2018-10-02 11:55 GMT   |   Update On 2018-10-02 11:55 GMT
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். #May17 #ThirumuruganGandhi
சென்னை:

ஆகஸ்ட் 7-ம் தேதி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 23 வழக்குகள் உள்ளன.

55 நாட்கள் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி இடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளன. #May17 #ThirumuruganGandhi
Tags:    

Similar News