செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கார் மோதிய விபத்தில் வாலிபர், பெண் பலி
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் மற்றும் பெண் பலியானார்.
மாமல்லபுரம்:
திருப்போரூரை அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவர் உறவினரான செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுடன் (25) கோவளம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 8மணியளவில் அவர்கள் தெற்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தியும், லாவண்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
திருப்போரூரை அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவர் உறவினரான செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுடன் (25) கோவளம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 8மணியளவில் அவர்கள் தெற்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தியும், லாவண்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews