செய்திகள்

விருதுநகரில் மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய மாணவர் கைது

Published On 2018-09-30 10:38 GMT   |   Update On 2018-09-30 10:38 GMT
மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் திருமணத்திற்கு மறுத்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பாண்டி (18) என்பவரும் படித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

பாண்டியுடன் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.

ஆனால் மாணவர் பாண்டி திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்தனர்.

Tags:    

Similar News