செய்திகள்

நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-09-29 18:19 GMT   |   Update On 2018-09-29 18:19 GMT
நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல்:

நாமக்கல்லில் போக்குவரத்து துறை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தை நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதலைப்பட்டியில் தொடங்கிய ஊர்வலம், நாமக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூங்கா சாலையில் முடிவுற்றது. இதில் தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலைய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர்.

இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசாரும் உடன் சென்றனர். பின்னர் பூங்கா சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News