செய்திகள்
பாடாலூர் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவர் பலி
பாடாலூர் அருகே மின்னல் தாக்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள உத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் விவேக் நேற்று மாலையில் அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். கல்குவாரி குட்டை அருகே நின்ற போது இடி,மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் விவேக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விவேக் மின்னல் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகிறார்கள்.