செய்திகள்

தமிழக மீனவர்களை தாக்கியது இலங்கை மீனவர்கள் தான் - அமைச்சர் ஓஎஸ் மணியன்

Published On 2018-09-29 08:12 GMT   |   Update On 2018-09-29 08:13 GMT
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இலங்கை மீனவர்கள் தான் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். #OSManiyan #FishermenAttacked
சென்னை:

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களாக நடுக்கடலில் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். துப்பாக்கியுடன் திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் மர்ம நபர்கள், தமிழக மீனவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும்  மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே இரு வேறு இடங்களில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, தமிழக மீனவர்களை தாக்கியது இலங்கை மீனவர்கள்தான் என்று தெரிவித்தார்.  தாக்குதல் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், கடல் எல்லையில் ரோந்துப் பணியினை துரிதப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். #OSManiyan #FishermenAttacked
Tags:    

Similar News