செய்திகள்
மண்ணடியில் பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை
மண்ணடியில் பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 3லட்சம் பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராயபுரம்:
மண்ணடி, பிடாரியார் தெருவை சேர்ந்தவர் சபிபுல்லா, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மகும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து முந்தியால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்ணடி, பிடாரியார் தெருவை சேர்ந்தவர் சபிபுல்லா, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மகும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து முந்தியால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.