செய்திகள்

ஜனவரி 1-ந்தேதி முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை

Published On 2018-09-28 03:44 GMT   |   Update On 2018-09-28 03:44 GMT
அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார். #PlasticBan
சென்னை:

சுற்றுச்சூழல் கருதி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அண்ணாபல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.

இதேபோன்று பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். #PlasticBan
Tags:    

Similar News