செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் 44 கிலோ கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது

Published On 2018-09-25 08:55 GMT   |   Update On 2018-09-25 08:55 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் 44 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிபூண்டி:

கும்மிடிபூண்டியை அடுத்த எலாவூரில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது.

இந்த வழியாக வரும் வாகனங்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை வந்த பஸ்சிலும் சோதனை நடந்தது.

அப்போது 3 பேரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 22 கஞ்சா பொட்டலங்களில் மொத்தம் 44 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் பெண்கள் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா (45).

இன்னொரு பெண் தஞ்சையை சேர்ந்த பாண்டியம்மா (38). இவர்களுடன் ராசி (23) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவரும் தஞ்சையை சேர்ந்தவர். கைதான 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News