செய்திகள்

பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

Published On 2018-09-24 11:21 GMT   |   Update On 2018-09-24 11:21 GMT
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
கீழ்பென்னாத்தூர்:

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட்ட காட்டுமலையனூர் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து உயர் நிலைப் பள்ளி திறப்புவிழா காட்டுமலையனூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, கலசபாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

அதன்படி, கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கையான கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.
Tags:    

Similar News