செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-09-22 17:14 GMT   |   Update On 2018-09-22 17:14 GMT
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை மாவட்டம் புதுத்தாமரை பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவரது மனைவி சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. உடல் கருகிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் மன வேதனையில் இருந்த கண்ணன், மனைவியை பிரிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இதனையடுத்து கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த 3 நாளில் கணவரும் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒத்தக்கடை போலீசில் கண்ணனின் சகோதரர் சரவணகுமார் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். ஜெயலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ராமச்சந்திரனும், மாமனார் குருசாமியும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீதும் தீப்பற்றியது.

பலத்த தீக்காயங்களுடன் 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். ராமச்சந்திரன், குரு சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஜெயலட்சுமியின் தந்தை பாண்டியன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. நல்லு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News