செய்திகள்

துடியலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-09-22 19:17 IST   |   Update On 2018-09-22 19:17:00 IST
துடியலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை துடியலூர் தொப்பம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தார்.

கம்பெனியில் இருந்து சரியாக சம்பளம் கிடைக்க வில்லை. மாற்று வேலையும் உடனே கிடைக்கவில்லை. இதனால் கவுதம் விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News