செய்திகள்

அண்ணாநகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருட்டு

Published On 2018-09-22 10:13 GMT   |   Update On 2018-09-22 10:13 GMT
அண்ணாநகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MoneyRobbery
அம்பத்தூர்:

அண்ணாநகர் 3-வது அவென்யூவை சேர்ந்தவர் ரபிஅகமது. தொழிலதிபர். இவர் நேற்று மாலை மசூதிக்கு காரில் சென்றார்.

சாலையோரம் காரை நிறுத்தி விட்டு மசூதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MoneyRobbery

Tags:    

Similar News