செய்திகள்

மதுரையில் 935 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் - 6 பேர் கைது

Published On 2018-09-21 10:19 GMT   |   Update On 2018-09-21 10:19 GMT
மதுரையில் புகையிலை விற்ற 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 935 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை:

மதுரை நகரில் கரிமேடு, தல்லாகுளம், கூடல்புதூர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மறைவான பகுதியில் புகையிலை விற்ற பெத்தானியாபுரம் சவுந்தரராஜன் (வயத 61), பி.பீ.குளம் ஆரோக்கியசாமி (50), சங்கர் (49), கூடல்புதூர் சுப்பிரமணியன் (58), முத்துக் குமார் (37), முனிச்சாலை ராஜா (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 935 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்

மதுரை நகரில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

பள்ளி, கல்லூரி அருகில் சமூக விரோதிகளால் போதை பொருட்கள் விற்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News