செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஸ்ரீராம்நகர் ரெயில் கேட் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அழகப்பா மேலாண்மை நிறுவன இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினம் கருத்தரங்கை தொடங்கிவைத்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.
பின்னர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாமில்லத், மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி ஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.