செய்திகள்

வேலூர் சத்துவாச்சாரியில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2018-09-20 16:36 GMT   |   Update On 2018-09-20 16:36 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

வேலூர்:

காட்பாடி காங்கேய நல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது48). துணிவியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி (45). தம்பதி இருவரும் நேற்று சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு இரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது பைக்கில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செயின் பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News