செய்திகள்

ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மினி வேன், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2018-09-18 18:19 GMT   |   Update On 2018-09-18 18:19 GMT
ஆத்தூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்யி மினி வேனை பறிமுதல் செய்த போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர்:

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கல்பகனூர் வசிஷ்ட ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் செல்வன், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் மது ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளியதாக 4 மாட்டு வண்டிகள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News