செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2018-09-18 07:31 GMT   |   Update On 2018-09-18 07:31 GMT
நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளதால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
கூடலூர்:

வைகை அணை கடந்த 4 வருடங்களாக போதிய அளவுமழை இல்லாததால் முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வைகை அணை நிரம்பி பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துவிட்டதால் அணைக்கு 1713 கன அடி நீரே வருகிறது. நீர்மட்டமும் வேகமாக குறைந்து 60.40 அடியாக உள்ளது. நேற்று வரை 3460 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 2990 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.65 அடியாக உள்ளது. 259 கன அடி நீர் வருகிறது. 1733 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.62 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு8, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News