செய்திகள்

வாழ்க்கையில் சாதிக்க உயர்கல்வி அவசியம் - சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பேச்சு

Published On 2018-09-17 16:58 GMT   |   Update On 2018-09-17 16:58 GMT
இன்றைய சூழலில் உயர் கல்வி என்பது மாணவர்கள் மிகவும் அவசியமானது என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறினார்.
காரைக்குடி:

காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முருகப்பா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் அவசியமானது. தற்போதைய வாழ்க்கை முறையில் சாதிக்க வேண்டும் என்றால் உயர்கல்வி தேவை. மாணவர்கள் நீண்ட தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். எனவே அதற்கான இலக்கை நோக்கியே முன்னேற வேண்டும். முடியும் என்ற முனைப்போடு செயல்பட்டு வெற்றியை காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 328 பி.இ. மாணவ-மாணவிகளுக்கும், 121 எம்.இ. மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். 
Tags:    

Similar News