செய்திகள்

அருப்புக்கோட்டையில் குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது

Published On 2018-09-16 10:38 GMT   |   Update On 2018-09-16 10:38 GMT
குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி குமரன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மாரி (வயது42). இவரது மனைவி ரோகமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் மாரி சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த 14-ந்தேதியும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மாரி, மனைவியை அடித்து உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த ரோகமணி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ரோகமணி இறந்தார். இந்த நிலையில் மாரி தாக்கியதால் தான் ரோகமணி இறந்ததாக அவரது தந்தை முத்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ரோகமணியை மாரி தாக்கியதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் இறந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் இன்று காலை மாரி கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News