செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

Published On 2018-09-15 17:09 GMT   |   Update On 2018-09-15 17:09 GMT
விவசாயி வீட்டின் பின்பக்க கதவு உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). இவரது மனைவி சின்னம்மாள்(85). விவசாயியான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, தங்களது ஓடு வீட்டில் தூங்கினர்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார்.

மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் இருந்த இரும்புபெட்டியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராமசாமியின் மருமகள் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து நகைகள்-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். 
Tags:    

Similar News