செய்திகள்
காட்பாடி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி
காட்பாடி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கல்புதூர் சக்திநகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் ஏறி கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை, பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்தனர். கொள்ளையன் ஜட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாணமாக உடலில் எண்ணெய் தேய்த்திருந்தான்.
பிடிக்க முயன்றவர்களை கத்தியால் வெட்டி விட்டு கொள்ளையன் தப்பிக்க முயன்றான். இதில் பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த கொள்ளையனை விரட்டி பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதுப்பற்றி காட்பாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நெல்லையை சேர்ந்த அய்யப்பன் (வயது 40) என் பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.