செய்திகள்
பூமியான்பேட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேருக்கு வலைவீச்சு
பூமியான்பேட்டையில் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் வாலிபரை வெட்டிய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது27). எலக்ட்ரீசியன். இவருக்கும் காராமணிக்குப்பத்தை சேர்ந்த விக்கி என்பவருக்கு பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இரவு நடராஜன் பூமியான்பேட்டை பாவாணர் நகரில் உள்ள பூங்காவில் தனது நண்பர்களுடன் மதுகுடித்து அவ்வழியே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விக்கி பணம் கேட்டு நடராஜனிடம் தகராறு செய்தார். அதே நேரத்தில் நடராஜனுடன் அவரது நண்பர்கள் உடன் இருந்ததால் விக்கி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் விக்கி தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு வந்தார்.
நடராஜன் மட்டும் தனியாக இருந்த நிலையில் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடராஜனை சரமாரியாக தாக்கினார். மேலும் விக்கி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடராஜனை வெட்டினார். பின்னர் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அரிவாளால் வெட்டப்பட்ட நடராஜனுக்கு கை மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகிறார். #tamilnews
புதுவை பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது27). எலக்ட்ரீசியன். இவருக்கும் காராமணிக்குப்பத்தை சேர்ந்த விக்கி என்பவருக்கு பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இரவு நடராஜன் பூமியான்பேட்டை பாவாணர் நகரில் உள்ள பூங்காவில் தனது நண்பர்களுடன் மதுகுடித்து அவ்வழியே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விக்கி பணம் கேட்டு நடராஜனிடம் தகராறு செய்தார். அதே நேரத்தில் நடராஜனுடன் அவரது நண்பர்கள் உடன் இருந்ததால் விக்கி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் விக்கி தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு வந்தார்.
நடராஜன் மட்டும் தனியாக இருந்த நிலையில் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடராஜனை சரமாரியாக தாக்கினார். மேலும் விக்கி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடராஜனை வெட்டினார். பின்னர் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அரிவாளால் வெட்டப்பட்ட நடராஜனுக்கு கை மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகிறார். #tamilnews