செய்திகள்

மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-12 13:48 GMT   |   Update On 2018-09-12 13:48 GMT
மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி வந்தது ரூ.200 ஆகவும், வணிக குடிநீருக்கும் ரூ.200 செலுத்தி வந்தது ரூ.400ஆகவும் உயர்த்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செல்லவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் பேரூராட்சித் தலைவரும் உடையவர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுனன், மோகனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துசாமி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து முன்னால் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இள மதி துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நக்கீரன் உள்பட ஏராளமான பெண்கள் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக ஏற்றாதே ஏற்றாதே குடிநீர் கட்டணத்தை ஏற்றாதே என காலி குடங்களுடன் கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி கூறியதாவது:-

நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை அரசே உயர்த்தியதனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அனைத்து பேரூராட்சியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்படதக்கது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News