செய்திகள்

தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது- துரைமுருகன்

Published On 2018-09-12 07:33 GMT   |   Update On 2018-09-12 07:33 GMT
ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #DMK #DuraiMurugan #MKStalin
தென்காசி:

தென்காசியில் நேற்றிரவு தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்” என்றார்.


தொடர்ந்து துரைமுருகன் தென்காசியில் இன்று காலை நடந்த திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது. இதற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள். மதத்துக்கு மதம் திருமண முறை மாறுபட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார். #DMK #DuraiMurugan #MKStalin
Tags:    

Similar News