செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற வடமாநில வாலிபர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கொங்காலம்மன் வீதியை அடுத்த புது மஸ்ஜித் வீதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா விற்கப்படுவதாக ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் செல்வன் ரவி எழில் ஆகியோர் அடங்கிய குழுவினர் புது மஸ்ஜித் வீதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்
அப்போது ஒரு மாடி வீட்டு அருகே டேபிள் வைத்து வடமாநில வாலிபர் ஒருவர் சில பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருட்களை சோதனையிட்டனர் அப்போது 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது மேலும் சில வெள்ளி? நாணயங்களும் அந்த மூட்டைகளுக்குள் இருந்தன.
மொத்தம் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் புகையிலைப் பொருட்களை விற்று அந்த வாலிபர் ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் வயது 30 என தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
ஈரோடு கொங்காலம்மன் வீதியை அடுத்த புது மஸ்ஜித் வீதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா விற்கப்படுவதாக ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் செல்வன் ரவி எழில் ஆகியோர் அடங்கிய குழுவினர் புது மஸ்ஜித் வீதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்
அப்போது ஒரு மாடி வீட்டு அருகே டேபிள் வைத்து வடமாநில வாலிபர் ஒருவர் சில பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருட்களை சோதனையிட்டனர் அப்போது 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது மேலும் சில வெள்ளி? நாணயங்களும் அந்த மூட்டைகளுக்குள் இருந்தன.
மொத்தம் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் புகையிலைப் பொருட்களை விற்று அந்த வாலிபர் ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் வயது 30 என தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews