செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் நாளை பள்ளி விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2018-09-10 10:23 GMT   |   Update On 2018-09-10 10:23 GMT
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் நாளை 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, காலாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளில் நடக்க இருந்த காலாண்டு தேர்வுகள் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News