செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எமிஸ் அடையாள அட்டை

Published On 2018-09-09 15:58 GMT   |   Update On 2018-09-09 15:58 GMT
இடைநிற்றல் உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து மேலாண்மையையும் மேற்கொள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘எமிஸ்‘ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. #EMISCard #GovernmentSchool
மானாமதுரை:

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை கண்டறியும் வகையிலும், பல்வேறு காரணங்களால் இடமாறும் மாணவர்களை எளிதில் மற்ற அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையிலும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அந்தந்த பள்ளி தலை மை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 16 இலக்க எண் கொண்ட எமிஸ் அடையாள அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் எமிஸ் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ஆசிரியர் தினத்தன்று பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 76 மாணவ-மாணவிகளுக்கு எமிஸ் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி அடையாள அட்டைகளை வழங்கினார். இதேபோன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறியீடு கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு, இதுவரை பணியாற்றிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News