செய்திகள்

கருணாநிதிக்கு மதுரையில் வெண்கல சிலை - அனுமதி கேட்டு கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம்

Published On 2018-09-07 14:09 GMT   |   Update On 2018-09-07 14:09 GMT
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் வெண்கல சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi #MKAzhagiri
மதுரை:

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மு.க அழகிரி, கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தினார். 

இந்நிலையில், அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டுகிறேன்” என அழகிரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News