செய்திகள்
அதிக விலைக்கு மதுவிற்ற 2 பெண்கள் கைது
அயனாவரம் அருகே மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் ராஜிவ்காந்தி நகரில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.சி.எப். போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது மகாராணி (50), சீத்தா (34) ஆகியோர் டாஸ்மாக் பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. ‘மாவா’ போதை பவுடரும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
அயனாவரம் ராஜிவ்காந்தி நகரில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.சி.எப். போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது மகாராணி (50), சீத்தா (34) ஆகியோர் டாஸ்மாக் பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. ‘மாவா’ போதை பவுடரும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews