செய்திகள்

அமைதிப் பேரணி - அழகிரிக்கு மு.க.முத்து வாழ்த்து

Published On 2018-09-06 09:27 GMT   |   Update On 2018-09-06 09:27 GMT
கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மு.க.முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKMuthu #MKAlagiri
சென்னை:

கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று மு.க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’ மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் அழகிரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #MKMuthu #MKAlagiri

Tags:    

Similar News