செய்திகள்

தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-09-06 03:59 GMT   |   Update On 2018-09-06 03:59 GMT
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #NEET #NEETTraining #Sengottaiyan
சென்னை:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது என்றும் அமைச்சர் கூறினார்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளனர். #NEET #NEETTraining #Sengottaiyan

Tags:    

Similar News