செய்திகள்
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலூரில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-05 17:07 IST   |   Update On 2018-09-05 17:07:00 IST
கடலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இன்று கடலூர் சப்-ஜெயில் ரோட்டில் உள்ள கருவூலக கணக்குதுறை அலவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்:

கடலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இன்று கடலூர் சப்-ஜெயில் ரோட்டில் உள்ள கருவூலக கணக்குதுறை அலவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார்.

இதில் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், பொங்கள் போனஸ் நாள் கணக்கில் வழங்கவேண்டும், சமாபந்தி சிறப்பு படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News