செய்திகள்

ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2018-09-02 15:00 GMT   |   Update On 2018-09-02 15:00 GMT
அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் விரிவுரையாளர்களை நியமிக்க வலியுறுத்தி, மாணவ, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:

ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. 

இக்கல்லூரியில் இயற் பியல் மற்றும் கணிதத்துறை பாடங்கள் நடத்த 7 விரிவு ரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 விரிவுரையாளர்கள் மட் டுமே உள்ளனர். மாணவ, மாணவியருக்கு முறையாக பாடங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான விரிவுரையாளர்களை நியமிக்க பல முறை வலியுறுத்தியும் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் வீரப்பன், ஆவுடையார்கோவில் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் உள்ளிட்டோர் மாணவ,மாணவியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர். 

கல்லூரி மாணவ, மாணவியகளின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News