செய்திகள்
சேதராப்பட்டில் கல்லூரி மாணவி மாயம்
சேதராப்பட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சுஷ்மிதா. (வயது 19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-வது ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து சுஷ்மிதா தனது தோழிகளுடன் வீட்டுக்கு செல்ல சேதராப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது சுஷ்மிதா திடீரென மாயமானார்.
வெகு நேரமாக சுஷ்மிதா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சுஷ்மிதா இல்லை.
இதையடுத்து அவரது தாய் ஜோதி தனது மகள் மாயமானது குறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சுஷ்மிதா காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.