செய்திகள்

பெரியகுளம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய பிளஸ்-2 வாலிபருக்கு வலை

Published On 2018-09-01 11:09 GMT   |   Update On 2018-09-01 11:09 GMT
பெரியகுளம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது 16 வயது மகள் சருக்கு பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவரது பெற்றோர்கள் தனது மகளின் தோழிகளிடம் விசாரித்தனர். அதில் அதே பள்ளியில் படிக்கும் மாணவருடன் அவர் பழகி வந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தங்கராஜ் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்னக் கொடி மகன் ராஜேஷ். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதாகவும், அவர்தான் தனது மகளை கடத்திச் சென்றிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச் சென்ற மாணவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News